Friday 3rd of May 2024 07:40:02 PM GMT

LANGUAGE - TAMIL
.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!


இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

பங்களாதேசில் இருந்து நாடு திரும்பிய இருவர் மற்றும் பிலிப்பைன்சில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் என வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 2084 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்தவர்களது எண்ணிக்கை 1967 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 106 ஆக உள்ளது. அத்துடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE